ஞாயிறு, 13 ஜனவரி, 2013

ஜல்லிக்கட்டு தேவர் தேசிய விளையாட்டு.(Jallikattu,Manjuvirattu Nationalised Game for Thevars)

ஜல்லிக்கட்டு தேவர் தேசிய விளையாட்டு. ஜல்லிக்கட்டு எனப்படும் உயிரைப்பணயம் வைக்கும் வீர விளையாட்டுக்கு முதல் சொந்தக்காரர்கள் யாதவர்களே இந்திய முழுக்க பரவிய யாதவர்கள் ஜல்லிக்கட்டை தமிழகத்திற்கு கொண்டு வந்தனர். கடவுள் கண்ணன்தேவனின் இனமாகிய யாதவர்கள் குலத்தொழில் ஆடு,மாடு மேய்ப்பதே! ஆரியர்களான இவர்கள் ஆயர்கள்,இடையர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். மிகப்பெரிய மந்தைகளை கட்டுபடுத்தவும்,பொழுது போக்கிற்கும் காளைகளை அடக்கப்பழகினர். ஏறுதழுவல் அல்லது ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுக்களில் ஒன்று. ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு . தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் ஒன்றாகக்கருதப்படும் இவ்விளையாட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு எனும் ஊர்களிலும், புதுக்கோட்டை மாவட்டம் தேனீமலை , தேனி மாவட்டம் பல்லவராயன் பட்டி மற்றும் ஆவரங்காடு போன்ற ஊர்களில், ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளை ஒட்டி நடத்தப் பெறுகின்றன. ஜல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது. மேலும் 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த 'சல்லிக் காசு' என்னும் இந்திய நாணயங்களை துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடப்படும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்த பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம்பிற்காலத்தில் 'சல்லிக்கட்டு' என்று மாறியது. பேச்சு வழக்கில் அது திரிந்து 'ஜல்லிக்கட்டு' என்று ஆனது என்றும் கூறப்படுகிறது. சல்லிக்கட்டு தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக நடைபெறுகிறது. மதுரை அலங்காநல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடிகுறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள். வேலி மஞ்சுவிரட்டு எனப்படும் விளையாட்டில் ஒரு திடலில் காளைகள் அவிழ்த்துவிடப்படுகின்றன. அவை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஓடுவதும் அவற்றை இளைஞர்கள் விரட்டுவதும் நடைபெறுகிறது. பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரித்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்)என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது. கொல்லக் கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது. புது தில்லி தேசியக் கண்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கி.மு. 2000 ஆண்டு அளவிலேயே ஏறுதழுவல் வழக்கத்தில் இருந்தது. ஜல்லிக்கட்டு தைப்பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் நாளன்று விழாப் போல் கொண்டாடப்படுகிறது. ஏறு தழுவுதல் விழா தெய்வ நம்பிக்கையுடன் தொடர்புடையதாக இருக்கவில்லை. ஆனால் ஜல்லிக்கட்டு கிராமிய தேவதைகளின் வழிப்பாட்டு நம்பிக்கையுடன் தொடர்புடையதாகத் திகழ்கிறது. அம்மை, வைசூரி போன்ற கொடிய நோய்கள் பரவிய காலத்திலும், மழையில்லா வறட்சி காலங்களிலும், பிள்ளைவரம் கேட்கும் நிலையிலும் வேண்டுதல் நடைபெறும். இக்குறைகள் நீக்கப்பட்டால் பொங்கல் நாளன்று ஜல்லிக்கட்டுகிறோம் என்பதே வேண்டுகோளாய் அமைகிறது. பண்டைகாலத்திலே யாதவர்கள் தமிழகத்தில் குடியேறிதால் தமிழகத்திலும் பரவியது. மூவேந்தர் வம்சத்தினர் இவ்விளையாட்டில் பங்குகொள்ள இந்தநாளில் முக்குலத்தோர் விளையாட்டாகவே மாறியது.ஆயினும் தேவர்கள் பசுவதையோ,மாட்டை கொன்று தின்பதில்லை! மனுநீதிச்சோழனின் வம்சமாயிற்றே! பசுவை வெட்டி திங்கும் கும்பல் சோழனை உரிமைக்கொண்டாட நினைத்து அசிங்கப்படுகிறது. போட்டிக்கு குருபுஜை கொண்டாடுபவர்கள், போட்டிக்காக புதிதாக சாதிப்பெயர் வைப்பவர்கள், போட்டிக்கு எங்களைப்போல் ஜல்லிக்கட்டு நடத்துங்களேன்! புலியை வெறும் கையால் அடித்துக்கொள்வது தேவர் இன ஆண்களுக்கும், முறத்தால் புலியை விரட்டும் பெண்கள் வயிற்றில் பிறந்தவர்கள் நாங்கள். இன்று தென்மாவட்டங்களில் நடைபெறும் இவ்விளையாட்டு தேவரினத்தவரால் நடத்தப்படுகிறது. காளையை அடக்குபவர்கள் பெரும்பாலும் தேவர்களே. அறிதாகவே வேறு சமுகத்தினர் பங்கேற்கின்றனர். மாற்று சமுதாய மக்கள் வட தமிழகத்தில் வடம் மஞ்சுவிரட்டு என்ற பெயரில், 20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க, ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்கிறார்கள் பயப்பட என்ன இருக்கிறது. தேவரின தலைவர்களே ஜல்லிக்கட்டு விழாக்களை தொடங்கி வைக்கின்றனர். அரசு தடை செய்தபோதும் தடையை எதிர்த்து போரடி வெற்றி பெற்றவர்களும் தேவர்கள்.பிரிட்டிஷ் கெசட்டுகளில் தேவரினத்தவர்கள் மூர்க்கத்தனமாக காளையை அடக்கி ஜல்லிக்கட்டு விளையாடுபவர்கள் என்ற குறிப்புள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக